articles

img

கம்யூனிஸ்ட்களைப் புறக்கணித்து இந்திய வரலாறு இல்லை!

மகாகவி பாரதி “ஆகாவென்று எழுந்த தோர் யுகப் புரட்சி” என்று பாடிய சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவானது. இதில் எம்.என்.ராய், ஈவ்லின் ட்ரெண்ட் ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷாபிக், எம்.பி.டி. ஆச்சார்யா போன்றோர் பங்கேற்றனர். கட்சியின் செயலாளராக முகமது ஷாபிக் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் நிலைமைகளுக்கு ஏற்ப கம்யூ னிஸ்ட் கட்சியின் திட்டத்தை இறுதிப்படுத்து வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வரலாறு தொடங்கியது.   இந்த நூற்றாண்டு பயணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொண்ட சவால்களும் அடக்குமுறைகளும் எண்ணிலடங்கா. இந்நூல் இந்த வரலாற்றை ஒரு பருந்து பார்வையில் விளக்குகிறது.  

மார்க்சிய-லெனினிய  தலைமையின் கலை  

மா சேதுங் கூறுவது போல், கட்சிக் கொள்கையை மக்கள் செயல்பாடுகளாக மாற்றுவதும், முன்னணித் தலைவர்களை மட்டுமல்லாமல், பரந்த மக்கள் திரளையும் போராட்டங்களில் ஈடுபடுத்துவதும் மார்க்சிய- லெனினிய தலைமையின் கலையாகும். இந்தக் கலை நமது செயல்பாடுகளின் சரியான தவறான தன்மையை மதிப்பிடுவதற்கான வழியும் ஆகும். இதைக் கற்றுக்கொள்வதற்கு வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.   கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது தனிப்பட்ட வரலாறு அல்ல; இது இந்தியாவின், மேலும் உலகின் வர லாற்றின் ஒரு பகுதியாகும். இந்திய வர லாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் புறக்கணித்து முழுமையான வரலாற்றை எழுத முடியாது.  

தாஷ்கண்டில் தொடக்கம்

தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானபோது, உலகளாவிய பாட்டாளி வர்க்கப் புரட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் பின்னணியில் இணைந்து நின்றன. இந்திய விடுதலை குறித்து கம்யூனிஸ்ட் இயக்கம் எடுத்த நிலைப்பாடு, அது எப்படி முகிழ்த்தது என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.   வரலாற்றில் தனிநபர்களின் பங்கு   மார்க்சியம் வரலாற்றில் தனிநபர்களின் பங்கை உறுதிப்படுத்துகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எம்.என்.ராய்,  அமீர் ஹைதர் கான், முசாபர் அகமது, காஸி நஸ்ருல் இஸ்லாம், ஜி. அதிகாரி, கனக் முகர்ஜி,  எஸ்.வி. காட்டே போன்றோரின் பங்களிப்புகள் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.  

கருத்தியல் போராட்டம்  

எந்தவொரு போராட்டத்திற்கும் கருத்தியல் தெளிவு அடிப்படையானது. இந்திய விடுதலை இயக்கத்தில் “பூரண விடுதலை” என்ற முழக்கம் கம்யூனிஸ்ட்களின் கருத்தியல் தெளிவிலிருந்து உருவானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கருத்தியல் விவாதங்களும் நடைமுறைப் பணிகளும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடித்தளமாக இருந்துள்ளன.  

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்  

சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள், அதன் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றிய  பல்வேறு அம்சங்கள் இந்நூலில் விரிவாகப்  பேசப்படுகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தத்துவமும் ஸ்தாபனமும் இரு அடிப்படைத் தூண்களாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சியை மேற்கொள்வதற்கு தத்துவமும் ஸ்தாபனமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இந்நூல் விளக்குகிறது.  

வர்க்க வெகுஜன அமைப்புகள்  

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளமான செயல்பாட்டுக்கு வர்க்க வெகுஜன அமைப்பு கள் முக்கியமானவை. செங்கொடி தொழி லாளர் சங்கம் (கிர்னி காம்கர் யூனியன்) முதல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய எழுத்தாளர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளை கம்யூனிஸ்ட் இயக்கம் கட்ட மைத்தது. இவை வர்க்க அரசியல் உணர்வைத் தூண்டி, மகத்தான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்திய போராட்டத்தை ஒரு மகத்தான விடுதலை இயக்கமாக மாற்றின.

 தற்கால சூழல்  

இன்றைய உலகில் வலதுசாரி திருப்பத்தை சந்திக்கும் சூழலில், இந்தியா வில் கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டு மக்கள் மத்தியில் ஊடுருவி வருகிறது. இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி முசாபர் அகமது கூறியது போல், “புரட்சியை நடத்தி முடிக்கும் திறமை பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு மக்களிடையே நீடித்து பணி புரிவது அத்தியாவசியமான முன் நிபந்தனை” ஆகும்.   இந்நூல் கம்யூனிஸ்டுகள் அனை வருக்கும் செயல்பாட்டிற்கான உத்வேகத்தை அளிக்கும் ஒரு முக்கியமான ஆதாரமாக அமையும்.